முதல் முறையாக ஒரு பெண் விண்வெளிக்கு சுற்றுலா செல்கிறார். அமெரிக்காவை சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் அனோசி அன்சாரி தொழில் அதிபர். விண்வெளிக்கு சுற்றுலா செல்ல இவர் நாசா விண்வெளி நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்தி இருக்கிறார். அடுத்த மாதம் (செப்டம்பர்) 14-ந் தேதி கஜகஸ்தானில் இருந்து ரஷியாவின் `கோயுஸ்' ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா புறப்படுகிறார். பெண் பயணி ஒருவர் செல்வதால் அந்த ராக்கெட்டில் விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராக்கெட்டில் பயணம் செய்வதற்காக அவர் இப்போது, ரஷியாவில் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவருடன் கோயுஸ் ராக்கெட்டில் ரஷியா, அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீரர்களும் செல்கிறார்கள்.
snap
Friday, August 25, 2006
Thursday, August 24, 2006
பிஷப் ரூ.150 கோடி சுருட்டினார்
சென்னையை சேர்ந்த பிஷப் ஆனந்தராஜ் இலவச வீடு கட்டி தருவதாக மோசடி செய்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
அவரிடம் ஏராளமானோர் கோடிக் கணக்கில் பணத்தை இழந்து உள்ளனர். தொழில் அதிபர் கள், நடிகர்கள், காண்டிராக்டர்கள். ஆசிரியர்கள் என்று மேல் மட்டத்தில் இருந்து அப்பாவி பொதுமக்கள் வரை பலரிடம் பண மோசடி நடந்து உள் ளது.
தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி உள்ள ஆனந்தராஜ் ரூ. 150 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டி உள்ளார்.மோசடி பணத்தில் கார் பங்களா வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்தார்.
மோசடி பிஷப் ஆனந்தராஜ் மீது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 காண்டிராக்டர்கள் பெரம் பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரேம் ஆனந்த் சின்காவிடம் பரபரப்பு புகார்களை கூறி உள்ளனர். பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த செல்வகுமார், வாலிகண்ட புரத்தை சேர்ந்த குல்சர்அலி, சென்னையை சேர்ந்த ராஜரத்தினம் ஆகியோர் பிஷப் ஆனந்தராஜிடம் வேலை பார்த்து வந்தனர்.
அவர்கள் 3 பேரும் கடந்த 2004-ம் ஆண்டு பெரம்பலூரை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர்கள் கருணாநிதி, கலைசெல்வன், மாரிமுத்து, சாமிகண்ணு, கஸ்பர், ராஜகோபால் ஆகியோரை சந்தித்து இலவச வீடு கட்டுவது தொடர்பாக பேசினார்கள்.
6 காண்டிராக்டர் களும் தலா ரூ. 5 லட்சம் கொடுத்தால் அவர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டப்படும் இலவச வீடுகளுக்கான காண்டிராக்டை கொடுப்பதாக ஆசை காட்டி உள்ளனர்.
இதை நம்பிய இவர்கள் 6 பேரும் லட்சக்கணக்கில் முன் பணத்தை கொடுத்து உள்ளனர். கருணாநிதி ரூ. 2 லட்சத்து 75 ஆயிரமும் கலை செல்வன் ரூ. 2 லட்சத்து 25 ஆயிரமும், மாரிமுத்து ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம், சாமிகண்ணு ரூ. 1 லட்சமும், கஸ்பர் ரூ. 2 லட்சத்து 25 ஆயிரமும், ராஜகோபால் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரமும் முன்பணமாக கொடுத்தனர்.
இவர்கள் 6 பேரும் சேர்ந்து 275 வீடுகள் கட்டி கொடுக்க பிஷப் ஆனந்தராஜிடம் ஒப்பந்தமும் போட்டனர். ஆனந்த ராஜ் பணம் தந்து விடுவார் என்ற நம்பிக்கையில் தங்கள் பணத்தை லட்சக்கணக்கில் போட்டு கட்டிட பணிகளை தொடங்கிய காண்டிராக்டர்கள் அதிர்ச்சி யில் உறைந்து போனார்கள்.
சென்னை சென்று ஆனந்தராஜை சந்தித்து 6 பேரும் பணத்தை தரும்படி கேட்டனர். அவர்கள் 6 பேருக்கும் சேர்த்து ரூ. 50 லட்சத்துக்கு ஆனந்தராஜ் செக் கொடுத்தார். தான் சொன்ன பிறகுதான் செக்கை பாங்கியில் போடவேண்டும் என்றார்.
ஆனால் ஆனந்தராஜிடம் இருந்து பணம் பற்றி எந்த தகவலும் வராததால் 6 காண்டிராக்டர்களும் மீண்டும் சென்னைக்கு வந்து பணம் கேட்டனர்.
நைசாக 6 காண்டிராக்டர்களிடமும் பேசி ரூ. 50 லட்சத்துக்கு தான் கொடுத்த செக்கை ஆனந்தராஜ் வாங்கிக் கொண்டார். இதுபற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
ஆனந்தராஜின் மனைவி டெய்சி, உதவியாளர்கள் சுரேஷ்குமார், பழனி ஆகி யோரும் இதற்கு உடந்தையாக இருந்து உள்ளனர்.
ஆனந்தராஜின் மோசடி லீலைகள் வெளியாகியதால் இவர்களும் தைரியமாக புகார் செய்து உள்ளனர். மொத்தம் ரூ. 46 லட்சத்து 25 ஆயிரம் தங்களிடம் மோசடி செய்த ஆனந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் கூறி உள்ளனர்.
பிஷப் ஆனந்தராஜ் மோசடி பணத்தை நடிகைகளுக்கு வாரி இறைத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குரூப் செக்சில் அதிக நாட்டம் உடைய அவர், பெங்களூரில் ஒரு நடிகையின் வீட்டுக்கு சென்று கும்மாளம் அடித்துள்ளார். போதையில் நடிகையுடன் சல்லாபித்து அரை நிர்வாணமாக தன்னுடன் உல்லாசமாக இருக்கும் நடிகைகளுக்காக ஏராளமான பணத்தை வாரி வழங்கி இருக்கிறார்.
இதே போல் ஐதராபாத்துக்கும் நடிகைகளை அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்திருக்கிறார்.
தமிழில் கதாநாயகியாக வலம் வந்து தற்போது சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் 3 எழுத்து நடிகை பிஷப் ஆனந்தராஜ் அழைக்கும் போதெல்லாம் சென்று வந்துள்ளார். இதற்காக நிறைய பணத்தை ஆனந்தராஜ் அள்ளிக்கொடுத்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் 3 எழுத்து கவர்ச்சி நடிகை ஒருவரும் மாமல்லபுரம் பங்களாவுக்கு அடிக்கடி சென்று ஆனந்தராஜிடம் பணம் வாங்கி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் பிஷப் ஆனந்தராஜை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எந்தெந்த நடிகைகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று பிஷப் ஆனந்தராஜிடம் போலீசார் கேட்டதற்கு 5 நடிகைகளின் பெயர்களை போலீசாரிடம் கூறி உள்ளார்.
இதனால் அந்த 5 நடிகைகளின் வீட்டுக்கு சென்று விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதில் மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
நன்றி : மாலைமலர்
Wednesday, July 19, 2006
Monday, June 05, 2006
போதை மருந்து வழக்கில் ராகுல் மகாஜன் கைதாகிறார்?
மறைந்த பாரதீய ஜனதா மூத்த தலைவர் பிரமோத்மகாஜனின் மகன் ராகுல் மகாஜன் போதை மருந்து விவகாரத்தில் சிக்கி இருக்கிறார். தற்போது ஆஸ் பத்திரியில் இருக்கும் அவர் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை.
அவருக்கு நினைவு திரும்பி விட்டாலும் இன்னும் முழுமையாக பேசும் அளவுக்கு இல்லை என்று அவர் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
ராகுல்மகாஜன் மயங்கி விழுந்ததற்கு போதை மருந்துதான் காரணம் என்று இப்போது உறுதியாக தெரிய வந்து உள்ளது. அவருடைய சிறுநீர் தனியார் ஆய்வுக் கூடம் ஒன்றில் பரிசோதிக்கப்பட்டது. சிறுநீரில் போதை மருந்து இருப்பது தெரிய வந்தது.
போதை மருத்து பயன் படுத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே இந்த பிரிவின்படி அவர் மீது வழக்கு தொடர போலீசார் ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்கனவே போடப்பட்ட எப்.ஐ.ஆரில் போதை மருந்து தொடர்பான 3 பிரிவுகளை சேர்த்துள்ளனர். ஆனாலும் ராகுல் மகாஜன் பெயரை அதில் நேரடியாக சேர்க்கப் படவில்லை. அவருடன் விருந்து சாப்பிட்ட 4 பேர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கைதான ஷகில் ராகுல் மகாஜனுக்கு போதை மருந்து கொடுத்ததை ஒத்துக் கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் ராகுல் மகாஜனிடம் விசாரணை நடத்த உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தும் அளவுக்கு உடல்நிலை இல்லை என்று டாக்டர்கள் கூறி விட்டதால் இன்னும் விசாரணை நடத்த வில்லை.
இன்று அல்லது நாளை போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அவர் வாக்கு மூலத்தை பெற்ற பின் அவரை கைது செய்ய திட்டமிட்டு உள்ளனர். வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவர் மீது போதை மருந்து வழக்கில் ஏதாவது ஒரு பிரிவு சேர்க்கப்படும்.
போதை மருந்து வழக்கில் பிரிவு 21, பிரிவு 27, பிரிவு 29 ஆகிய 3 பிரிவுகள் உள்ளன. இதில் பிரிவு 21 போதை மருந்து வியாபாரம் தொடர்பானது. இந்த பிரி வில் கைதானால் ஜாமீன் கிடையாது. 10 ஆண்டு முதல் 20 ஆண்டு வரை ஜெயில் தண்டனை கிடைக்கும்.
பிரிவு 27 போதை மருந்தை பயன்படுத்துவது தொடர்பானது. இது சாதாரண பிரிவுதான் இதன்படி கைதானால் ஒரு வருடம் வரை ஜெயிலோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.
29-வது பிரிவு போதை மருந்து சதி தொடர்பானது விசாரணையின் அடிப்படையில் இதற்கு தண்டனை வழங்கப்படும்.
ராகுல்மகாஜன் மீது குறைந்த பட்ச தண்டனை பிரிவான 21-வது பிரிவை சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்கு போதை மருந்து கொடுத்த ஷகீல் மீது அதிக பட்ச பிரிவு சேர்க்கப்படும். டெல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்த அவரை 8 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதித்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அவருக்கு நினைவு திரும்பி விட்டாலும் இன்னும் முழுமையாக பேசும் அளவுக்கு இல்லை என்று அவர் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
ராகுல்மகாஜன் மயங்கி விழுந்ததற்கு போதை மருந்துதான் காரணம் என்று இப்போது உறுதியாக தெரிய வந்து உள்ளது. அவருடைய சிறுநீர் தனியார் ஆய்வுக் கூடம் ஒன்றில் பரிசோதிக்கப்பட்டது. சிறுநீரில் போதை மருந்து இருப்பது தெரிய வந்தது.
போதை மருத்து பயன் படுத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே இந்த பிரிவின்படி அவர் மீது வழக்கு தொடர போலீசார் ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்கனவே போடப்பட்ட எப்.ஐ.ஆரில் போதை மருந்து தொடர்பான 3 பிரிவுகளை சேர்த்துள்ளனர். ஆனாலும் ராகுல் மகாஜன் பெயரை அதில் நேரடியாக சேர்க்கப் படவில்லை. அவருடன் விருந்து சாப்பிட்ட 4 பேர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கைதான ஷகில் ராகுல் மகாஜனுக்கு போதை மருந்து கொடுத்ததை ஒத்துக் கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் ராகுல் மகாஜனிடம் விசாரணை நடத்த உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தும் அளவுக்கு உடல்நிலை இல்லை என்று டாக்டர்கள் கூறி விட்டதால் இன்னும் விசாரணை நடத்த வில்லை.
இன்று அல்லது நாளை போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அவர் வாக்கு மூலத்தை பெற்ற பின் அவரை கைது செய்ய திட்டமிட்டு உள்ளனர். வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவர் மீது போதை மருந்து வழக்கில் ஏதாவது ஒரு பிரிவு சேர்க்கப்படும்.
போதை மருந்து வழக்கில் பிரிவு 21, பிரிவு 27, பிரிவு 29 ஆகிய 3 பிரிவுகள் உள்ளன. இதில் பிரிவு 21 போதை மருந்து வியாபாரம் தொடர்பானது. இந்த பிரி வில் கைதானால் ஜாமீன் கிடையாது. 10 ஆண்டு முதல் 20 ஆண்டு வரை ஜெயில் தண்டனை கிடைக்கும்.
பிரிவு 27 போதை மருந்தை பயன்படுத்துவது தொடர்பானது. இது சாதாரண பிரிவுதான் இதன்படி கைதானால் ஒரு வருடம் வரை ஜெயிலோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.
29-வது பிரிவு போதை மருந்து சதி தொடர்பானது விசாரணையின் அடிப்படையில் இதற்கு தண்டனை வழங்கப்படும்.
ராகுல்மகாஜன் மீது குறைந்த பட்ச தண்டனை பிரிவான 21-வது பிரிவை சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்கு போதை மருந்து கொடுத்த ஷகீல் மீது அதிக பட்ச பிரிவு சேர்க்கப்படும். டெல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்த அவரை 8 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதித்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-நன்றி: மாலைமலர்
Friday, June 02, 2006
கண்ணகி சிலை நாளை திறப்பு
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது அகற்றப்பட்டது.
லாரி ஒன்று மோதியதைத் தொடர்ந்து போக்குவரத்துக்கு இடைïறாக இருப்பதாக கூறி அதிகாரிகள் அந்த சிலையை அகற்றினார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கடற்கரையில் கண்ணகி சிலை வைக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி தி.மு.க. ஆட்சியை பிடித்ததும் கண்ணகி சிலை வைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கின.
முதல்- அமைச்சர் கருணாநிதி, பதவி ஏற்ற மறுநாளே மெரீனா கடற்கரைக்கு சென்று கண்ணகி சிலை இருந்த இடத்தைப் பார்வையிட்டு அந்த இடத்தில் பீடம் அமைப்பதற்கான ஆலோசனை தெரிவித்து உத்தரவிட்டார். பிறகு மே 15-ந்தேதி சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருஙகாட்சியகத்துக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணகி சிலையை பார்வையிட்டார்.
முதல்- அமைச்சர் கருணாநிதி உத்தரவின்பேரில் கண்ணகி சிலை சீரமைப்பு பணி மும்முரமாக நடந்தது. இதற்கிடையே மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலைக்கான பீடம் அமைக்கும் பணியும் நடந்தது. அவை முடிந்ததும் கண்ணகி சிலை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.
பீடத்தின் மீது கண்ணகி சிலை நிறுவப்பட்டது. இதையடுத்து பீடத்தை கிரானைட் கல் மற்றும் கல்வெட்டு பதிக்கும் பணி நடந்தது. அந்த பணிகளும் இன்று நிறைவடைந்தன.
முதல்- அமைச்சர் கருணாநிதி அறிவுரையின் பேரில் கண்ணகி சிலை மீண்டும் அதே இடத்தில் பழைய மாதிரி நிறுவப்பட்டு விட்டது. கண்ணகி சிலை திறப்புவிழா நாளை (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.
முதல்-அமைச்சர் கருணாநிதி கண்ணகி சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் அமைச்சர்கள், தமிழ்ச்சான்றோர்கள் மற்றும் அதிகாரிகள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
Monday, May 29, 2006
இந்தோனேஷியாவுக்கு இந்தியா உதவிக்கரம்
இந்தோனேஷியா நாட்டில் ஜாவா தீவில் பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. அதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமான பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் உலகத்தையே உலுக்கி உள்ளது.
இந்நிலையில் இந்தோனேஷியாவுக்கு உதவ இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதை மத்திய ராணுவ மந்திரி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து அவர் இந்தோனேஷிய ராணுவ மந்திரி ஜீவனோ சுதர்சனோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்நிலையில் இந்தோனேஷியாவுக்கு உதவ இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதை மத்திய ராணுவ மந்திரி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து அவர் இந்தோனேஷிய ராணுவ மந்திரி ஜீவனோ சுதர்சனோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தோனேஷியாவில் பூகம்பம் ஏற்பட்டு ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்பட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு இந்திய மக்கள் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தோனேஷியாவுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும், ஒத்துழைப்பும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
இதற்கிடையே, இந்தோனேஷியாவில் பூகம்பத்தால் பலியானவர்களின் குடும்பத்துக்கு பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இந்தோனேஷிய பாராளுமன்ற சபாநாயகருக்கு இரங்கல் கடிதம் அனுப்பி உள்ளார்.
- நன்றி : மாலைமலர்
Tuesday, May 23, 2006
முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய கடிதம்
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய கடித்தத்தில் கூறி இருப்பதாவது:-
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், எ.ஐ.எம்.எஸ் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி) அவசியம் என்பது தமிழகத்தின் அனைத்து மக்களின் நீண்ட கால குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் கோரிக்கை ஆகும்.
மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படும் அல்லது நிதி உதவி அளிக்கப்படும் இந்த கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பை அடுத்து தமிழக மக்களின் இதற்கான எதிர்பார்ப்பு பன் மடங்காக அதிகரித்து உள்ளது.
கீழ்மட்டத்தில் உள்ள வகுப்பினரின் எதிர்காலம் மத்திய அரசின் இந்த அறிவிப்பின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைப்படி அமைந்து இருப்பதால், இதை எந்தவித காலதாமதம் இன்றியும், தள்ளிப்போடுதல் இன்றியும் உடனடியாக அமல் படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்த இட ஒதுக்கீட்டை அமல் படுத்து வதற்காக அவசர சட்டம் ஒன்றை கொண்டு வரவேண்டும் என்பது எனது கருத்தாகும்.
எனது வேண்டுதலின் அடிப்படையில் இது தொடர்பாக மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்தால் இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் மத்திய அரசுக்கு நன்றியுடையவர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.
Monday, May 22, 2006
பிளஸ்-2 தேர்வு முடிவுகள்
தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி முடிவடைந்தது. 1570 தேர்வு மையங்களில் 4 ஆயிரத்து 421 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் 5 லட்சத்து 27 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.
சென்னையில் 42 ஆயிரத்து 946 மாணவ- மாணவிகள் 133 தேர்வு மையங்களில் பரீட்சை எழுதினார்கள். புதிய பாடத்திட்டம் கொண்டு வந்த பிறகு நடந்த முதல் தேர்வு இதுவாகும்.
பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) காலை 9-30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை இயக்குனரக அலுவலகத்தில் வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவை தேர்வுத்துறை இயக்குனர் ஜெகநாதன் வெளியிடுகிறார்.
அதே நேரத்தில் மாணவர்கள் படித்த பள்ளியில் தேர்வு முடிவு மற்றும் மார்க்கு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் .மேலும் இணையதளங்களிலும் செல்போனில் எஸ்.எம்.எஸ் மூலமும் தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இணைய தள முகவரிகள் வருமாறு:-
http://dge1tn.nic.in
http://dge2.tn.nic.in
http://dge3.tn.nic.in
www.maalaimalar.com
www.timeschennai.com
http://plus2.galatta.com/
www.webulagam.com
http://www.studentsmart.in
www.apollotimes.com
www.southindia.com
http://results.sify.com
www.cscindiajobs.com
www.collegesintamilnadu.com
www.innovaindia.com
www.dreamjob.co.in
www.Indiaresults.com
www.chennaionline.com
www.indiavarta.com
www.madrastimes.com
www.squarebrothers.com
www.collegechanakya.com
www.tnagar.com
www.chennaivision.com
www.turningpointindia.com
http://dge2.tn.nic.in
http://dge3.tn.nic.in
www.maalaimalar.com
www.timeschennai.com
http://plus2.galatta.com/
www.webulagam.com
http://www.studentsmart.in
www.apollotimes.com
www.southindia.com
http://results.sify.com
www.cscindiajobs.com
www.collegesintamilnadu.com
www.innovaindia.com
www.dreamjob.co.in
www.Indiaresults.com
www.chennaionline.com
www.indiavarta.com
www.madrastimes.com
www.squarebrothers.com
www.collegechanakya.com
www.tnagar.com
www.chennaivision.com
www.turningpointindia.com
மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எஸ்.எம்.எஸ். மூலம் பிளஸ்-2 மார்க் பட்டியலை பெற தினத்தந்தி சிறப்பு ஏற்பாடு செய்து உள்ளது. ஈபஏ என்று டைப் செய்து பிளஸ்-2 தேர்வு எண்ணையும் டைப் செய்து 7333 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். சில வினாடிகளில் உங்கள் மொபைல் போனில் மார்க் பட்டியல் தெரியும். எடுத்துக்காட்டாக பிளஸ்-2 ரிஜிஸ்தர் நம்பர் 123456 என்று வைத்துக்கொள்வோம்.
ஈபஏ 123456 என்று டைப் செய்து 7333 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
தமிழ்நாடு டெலிகாம் சர்க்கிள் மக்கள் தொடர்பு அதிகாரி கே.ராஜசேகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எஸ்.எம்.எஸ். சேவை மூலம் தெரிந்து கொள்வதற்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்த விரும்புபவர்கள் செல்போனில் எச் எஸ் சி என்று ஆங்கிலத்தில் டைப் செய்து அத்துடன் தேர்வு எண்ணையும் பதிவு செய்து 3333 என்ற எண்ணுக்கு அனுப்பி பிளஸ்-2 முடிவை தெரிந்து கொள்ளலாம்.
போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு 80 காசும், பிரிபெய்டுதாரர்களுக்கு ஒரு ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த சேவையை சென்னை டெலிபோன் வாடிக்கையாளர்களும் பயன் அடையலாம் என்று சென்னை டெலிபோன் அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் செல்போனில் 1234 டயல் செய்தால் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.
Friday, May 19, 2006
`சிலிம்'ஆக இருக்கும் விமான பணிப்பெண்களுக்கே வேலை
விமான பயணிகளை தங்கள் பக்கம் கவர்ந்து இழுப்பதில் இந்தியன் ஏர்லைன்சுக்கும், மற்ற தனியார் விமான நிறுவனங்களுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே விமான நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை அதிரடியாக குறைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தின.
இந்த நிலையில் தங்கள் சேவையை மேலும் மெருகூட்ட இந்தியன் ஏர் லைன்ஸ் நிறுவனம் சில புதிய முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி விமான பணிப் பெண்கள் மற்றும் ஆண் பணியாளர்கள் தங்கள் உயரத்துக்கு ஏற்ற உடல் எடையுடன்தான் இருக்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விமான பணிப்பெண்கள் `சிலிம்' ஆக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. விமான பணிப் பெண்கள் தங்கள் உயரத்துக்கு ஏற்ப இருக்க வேண்டிய எடைக்கு மேல் 100 கிராம் கூடுதல் எடை இருந்தாலும் வேலை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குண்டாக இருக்கும் பெண்களுக்கு விமானத்தில் இல்லாமல் அலுவலக பணி கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் 45 நாட்களுக்கு அவர்கள் உடல் எடையை குறைத்து சிலிம் ஆகிவிட்டால் மீண்டும் அவர்களுக்கு விமான பணிப்பெண் வேலை கொடுக்கப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.
- நன்றி: மாலைமலர்
Tuesday, May 16, 2006
தேர்தல் முடிவு : சோ
தேர்தல் முடிவு குறித்து எழுத்தாளர் சோ கூறி இருப்பதாவது:-
தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கு நான் ஆரம்பத்திலிருந்தே சுட்டிக் காட்டி வருகிற, அவர்களுடைய கூட்டணி பலம் ஒரு முக்கியக் காரணம். ஆனால் இதையும் மீறி, அ.தி.மு.க. வெற்றி பெறக்கூடும் என்ற சூழ்நிலையும் நிலவியது. பின்னர் அது சந்தேகத்திற்குரிய தாகிற நிலை உருவாயிற்று.
இதற்குக் காரணம், தி.மு.க.வின் இலவச அறிவிப்பு கள்தான் என்ற பரவலான கருத்து, ஏற்கக் கூடியதா கவே இருக்கிறது. ஆக, தி.மு.க. கூட்டணி இத்தேர்தலில் வென்றால், அதற்கு பலமான கூட்டணி, இலவச அறிவிப்புகள் என்ற இரண்டுமே காரணங்களாக இருக்க முடியும்.
சரி, அ.தி.மு.க. கூட்டணி இத்தேர்தலில் வெற்றி பெற்றால், அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?-என்பதையும் பார்ப்போம்.
தி.மு.க.வின் கூட்டணி பலத்தையும், இலவச அறிவிப்புகளையும் மீறி, அ.தி.மு.க. அணி வெற்றி பெற்றால், அது ஒரு சாதனையே. அம்மாதிரி நிகழ்ந்தால், அதற்கு முக்கிய காரணம், அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்குப் பெரிதாக ஏற்பட்ட திருப்தியாகத்தான் இருக்க முடியும். அதைத் தவிர, தி.மு.க.விற்கு போட்டியாக ஜெயலலிதா அறிவித்த இலவசங்களும் இதற்கு ஒரு காரணமாக அமையலாம்.
அ.தி.மு.க. அணி தோற்றால், அதற்கு காரணங்களாக என்ன இருக்க முடியும்?-என்றால் சிலவற்றைக் கூற முடியும்.
அம்மாதிரி நிகழ்ந்தால்- கிட்டத்தட்ட தன்னை மட்டுமே நம்பி, ஜெயலலிதா இந்தத் தேர்தலை சந்தித்தது, தன்னம்பிக்கையை காட்டினாலும், நடைமுறை சாத்தியக் கூறுகளை அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஒரு காரணமாக அமையும்.
விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி ஏற்படத்திக் கொள்வது, அ.தி.மு.க.விற்கு நல்லது என்ற கருத்தை நாம் ஏற்கனவே சில முறைகள் தெரிவித்திருந்தோம். அப்படி நடக்காததும் ஒரு காரணமாக அமையலாம்.
தி.மு.க. இலவசங்களைப் பொறுத்தவரையில், ஜெயலலிதா இதை இரண்டு விதங்களில் சந்தித்திருக்கலாம். ஒன்று-தானும் இலவச அறிவிப்புப் போட்டியில் இறங்குவது, இதைத்தான் அவர் செய்தார்.
தி.மு.க. இலவசங்களைப் பொறுத்தவரையில், ஜெயலலிதா இதை இரண்டு விதங்களில் சந்தித்திருக்கலாம். ஒன்று-தானும் இலவச அறிவிப்புப் போட்டியில் இறங்குவது, இதைத்தான் அவர் செய்தார்.
மற்றொரு வழி இருந்தது. தி.மு.க.வின் இலவசங்களை நம்புவதற்கு மக்கள் தயங்கிய நிலையில் அவை சாத்தியமே அல்ல என்ற வகையில் அ.தி.மு.க. அணியின் பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டிருக்கலாம். அப்படி நடந்திருந்தால், தி.மு.க.வின் இலவச வாக்குறுதிகளே, அக்கட்சியின் கூட்டணிக்கு பெரும் பிரச்சினையாகி இருக்கக் கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கலாம்.
ஆனால் ஜெயலலிதா அந்த அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை. அவரும் இலவசப் போட்டியில் இறங்கிவிட்டதால் தி.மு.க. வாக்குறுதிகளும் சாத்தியமானவையே என்ற எண்ணம் பரவ, அவரும் உதவி விட்டார். அ.தி.மு.க. தோல்விக்கு ஒரு காரணமாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நன்றி: மாலைமலர்
Thursday, May 11, 2006
முடிவை மாற்றிய விஜயகாந்த்
விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட் சியை தொடங்கி 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டார். விஜயகாந்த் விருத்தாசலத்தில் போட்டியிட்டு 14 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசலத்தில் வெற்றி பெற்றார்.
அவருடைய கட்சி போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் அதிக ஓட்டுகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்து உள்ளது. அவரது கட்சி பெரிய கட்சிகளுக்கு பெரும் சவாலாகவே அமைந்து விட்டது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் விஜயகாந்தின் தே.மு.தி.க. 30 ஆயிரத்து 96 ஓட்டுகளை பெற்றுள்ளது. இங்கு காங்கிரஸ் 70 ஆயிரம் ஓட்டு பெற்று வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகளுக்கு 52 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்துள்ளன.
இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி பெற்ற 30 ஆயிரம் ஓட்டுகள் விடுதலை சிறுத்தைகளுக்கு கிடைத்திருந்தால் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்கும்.
தாம்பரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மொத்தம் 89 ஆயிரம் ஓட்டு பெற்றார். ம.தி.மு.க.வுக்கு 73 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தது. இந்த தொகுதியில் தே.மு.தி.க. 15 ஆயிரத்து 750 ஓட்டுகள் பெற்றுள்ளது. இந்த ஓட்டு கிடைத்திருந்தால் ம.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும். அச்சரபாக்கத்தில் தே.மு.தி.க. 10 ஆயிரத்து 500 ஓட்டுகளும், காஞ்சீபுரத்தில் 15 ஆயிரம் ஓட்டுகளும் பெற்றுள்ளது.
இது போல தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் விஜயகாந்தின் தே.மு.தி.க. அதிக அளவில் ஓட்டுகளைப் பெற்றுள்ளது. ஓட்டுகள் பிரித்ததால் பல தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளும், சில தொகுதிகளில் தி.மு.க. கூட் டணி கட்சிகளும் தோல்வி அடைந்துள்ளன.
மொத்தத்தில் விஜயகாந்த் கட்சி பெரிய கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது.
- நன்றி மாலைமலர்
Wednesday, May 10, 2006
யார்? யார்?
அனைத்து தொகுதியின் நிலவரமும் நாளை முற்பகல் 11 - க்குள் தெரிந்துவிடும். அப்போதுதான் நமக்கு நிம்மதி! அதுவரை நமது வேட்பாளர் வெற்றி பெறுவாரா? மாட்டாரா? என்ற எண்ணம் தான் மேலோங்கி நிற்கும்.
Friday, May 05, 2006
சிந்திப்பீர்! வாக்களிப்பீர்!
உங்கள் தொகுதிக்காக தொகுதி மக்களின் நலனுக்காக பாடுபடும் ஒருவருக்கு(அவர் எக்கட்சியாக இருந்தாலும்) வாக்களியுங்கள். வாக்களிப்பது உங்கள் கடமைகளில் ஒன்றாகும்.
Saturday, April 22, 2006
தினமலர் இதழுக்கு நன்றி
தமிழ் பொதுஅறிவு இணயதளத்தினை தினமலரின் டாட் காம் பகுதியில் 21-4-2006 அன்று தமிழில் படிக்க கிடைக்கும் தளங்கள் வரிசையில் வெளியிட்டமைக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் - தொடுப்பு
Friday, March 24, 2006
உங்களுக்கு ஏன் நோய் வரப்போகிறது? நிச்சயம் இல்லை
மனிதனாக வாழ்வதே நோய் நொடியில்லாமல் வாழ்வது தான். அதில் தான் எத்தனை பிரச்சனைகள். நாற்பது வயது தாண்டியதும் பல வியாதிகள் தானாக வந்து விடுகின்றன. நாற்பது வயது தாண்டிய ஒருவர் மருத்துவரிடம் தன்னை பரிசோதித்து கொண்டார் என்றால் மருத்துவர் ஏதேனும் ஒன்றோ அல்லது பல நோய்கள் உள்ளது என்றுதான் சொல்வார். அந்தளவிற்க்கு வியாதி பரவ காரணம் என்ன? மனிதன் உணவு மற்றும் பழக்கவழக்கங்களின் மாற்றம் இதுதான் காரணம். பழையகால மனிதர்கள் தங்கள் விளைச்சல் நிலங்களுக்கு உரமாக இயற்க்கை உரங்களையே இட்டார்கள். ஆனால் தற்போது ராசயான உரங்களைத்தான் இடுகின்றார்கள். இந்த ராசயான உரங்களிலுள்ள மூலக்கூருகள் மனிதனுடைய பல வளர்ச்சியினை பாதித்து அவனுடைய முதுமைபருவத்தில் பல நோய்களை விருத்திச்செய்கின்றது. இந்த ராசயான உரங்களைப்பயன்படுத்துவது இப்போது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. ஆகவே ராசயான உரங்களின் பக்கவிளைவுகளை ஆராய்ந்து அதன் பின் பக்கவிளைவு இல்லாத உரங்களை பயன்படுத்துவது நல்லது.
மற்றும் உணவு பழக்கவழக்கங்களில் நல்ல மாற்றத்தினை கொண்டுவர வேண்டும். நாள் ஒன்றிற்க்கு ஒருவர் பத்து லிட்டர் கொதிக்கவைத்து ஆற வைத்த நீரை அருந்த வேண்டும். பழைய பண்டங்களை உண்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
மேற்கூறிய காரணங்களை பின்பற்றினால் உங்களுக்கு ஏன் நோய் வரப்போகிறது? நிச்சயம் இல்லை என்றே கூறலாம்.
மற்றும் உணவு பழக்கவழக்கங்களில் நல்ல மாற்றத்தினை கொண்டுவர வேண்டும். நாள் ஒன்றிற்க்கு ஒருவர் பத்து லிட்டர் கொதிக்கவைத்து ஆற வைத்த நீரை அருந்த வேண்டும். பழைய பண்டங்களை உண்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
மேற்கூறிய காரணங்களை பின்பற்றினால் உங்களுக்கு ஏன் நோய் வரப்போகிறது? நிச்சயம் இல்லை என்றே கூறலாம்.
Friday, March 17, 2006
உறவுகள் மேம்பட
நானே பெரியவன் , நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்
எந்த விஷயத்தையும் , பிரச்சனையும் கையாளுங்கள்
சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்து ஆகவேண்டும் என்று உணருங்கள்
நீங்கள் சொன்னதே சரி , செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்
குறுகிய மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள்
மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி கர்வப்படாதீர்கள்
அளவுக்கு அதிகமாய் தேவைக்கு அதிகமாய் ஆசைபடாதீர்கள்
எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்க்ள்
கேள்வி படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்
உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்
மற்றக் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாததுப் போல் நடந்து கொள்ளாதீர்கள்
பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் , தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்
பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்
- சுபானந்தன்
எந்த விஷயத்தையும் , பிரச்சனையும் கையாளுங்கள்
சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்து ஆகவேண்டும் என்று உணருங்கள்
நீங்கள் சொன்னதே சரி , செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்
குறுகிய மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள்
மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி கர்வப்படாதீர்கள்
அளவுக்கு அதிகமாய் தேவைக்கு அதிகமாய் ஆசைபடாதீர்கள்
எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்க்ள்
கேள்வி படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்
உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்
மற்றக் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாததுப் போல் நடந்து கொள்ளாதீர்கள்
பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் , தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்
பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்
- சுபானந்தன்
உறவுகள் மேம்பட
நானே பெரியவன் , நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்
எந்த விஷயத்தையும் , பிரச்சனையும் கையாளுங்கள்
சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்து ஆகவேண்டும் என்று உணருங்கள்
நீங்கள் சொன்னதே சரி , செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்
குறுகிய மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள்
மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி கர்வப்படாதீர்கள்
அளவுக்கு அதிகமாய் தேவைக்கு அதிகமாய் ஆசைபடாதீர்கள்
எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்க்ள்
கேள்வி படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்
உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்
மற்றக் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாததுப் போல் நடந்து கொள்ளாதீர்கள்
பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் , தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்
பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்
- சுபானந்தன்
எந்த விஷயத்தையும் , பிரச்சனையும் கையாளுங்கள்
சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்து ஆகவேண்டும் என்று உணருங்கள்
நீங்கள் சொன்னதே சரி , செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்
குறுகிய மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள்
மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி கர்வப்படாதீர்கள்
அளவுக்கு அதிகமாய் தேவைக்கு அதிகமாய் ஆசைபடாதீர்கள்
எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்க்ள்
கேள்வி படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்
உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்
மற்றக் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாததுப் போல் நடந்து கொள்ளாதீர்கள்
பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் , தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்
பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்
- சுபானந்தன்
Subscribe to:
Posts (Atom)